Sunday, February 7, 2016

1 - அதிபத்த நாயனார்




அதிபத்த நாயனார், பரதவர் குலத்தைச் சார்ந்தவர்.திருனாகையில் பிறந்த இவர், சிவ தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தவர்.சிவன் மீதிருந்த சிவபக்தியின் காரணமாக, தினமும் தான் பிடிக்கும் மீங்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்,

சில நாட்களில், அவருக்கு ஒரு மீன் மட்டுமே பிடிபட்டாலும், அதை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு வெறுங்கையுடன் வீட்டிற்குத் திரும்புவார்,இதனால் வறுமை அவரை ஆட்டிப் படைத்தது.

ஒருநாள் சிவபெருமான் அவரை சோதிக்க எண்ணி, ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்கமீன் ஒன்றை அவரது மீன் வலையில் சிக்குமாறு செய்தார்.ஆனால், தீவிர பக்திமானான அதிபத்த நாயனார் அதையும் சிவனுக்கே அர்ப்பணம் செய்தார்.

. அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு முக்தியளித்தார்

இவ்வாறு வறுமையில் வாடினாலும், இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கத்தை தவறாதவராய் சிவபக்திக் கொண்டவராய் திகழ்ந்த இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

இவர் முக்தி அடைந்த தலமும் திருநாகை ஆகும்.ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் இவரது நாள் ஆகும்


இவரை "விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்" என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுகிறார்.

அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது.

.

தங்க மீன் அர்ப்பணிக்கும் விழா
ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது. அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்கிறது.

No comments:

Post a Comment