Saturday, May 6, 2017

2- அப்பூதி அடிகள்

திருநாவுக்கரசரின் சிவத்தொண்டைனை அறிந்த அப்பூதி அடிகள். சோழ நாட்டில் திங்களூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார்.

திருநாவுக்கரசரின் பெயரால், மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்து வந்தார்.

ஒரு முறை, திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் வசித்த ஊருக்குச் சென்ற போது, அங்கு தனது பெயரால் தர்மங்கள் நடப்பது கண்டு வியந்தார்

பின், அப்பூதி அடிகள் பற்றிக் கேள்விப் பட்டு அவர் இல்லம் சென்றார்

அப்பூதி அடிகளைப் பார்த்து,  "ஏன் உங்கள் பெயரில் செய்யாமல், திருநாவுக்கரசர் பெயரில் செய்கிறீர்கள்?" எனக் கேட்டார்

அதற்கு அடிகள், திருநாவுக்கரசர், சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்ததையும், பின், சிவன் அருளால் அச்சமயம் விட்டு வந்து, சைவ மதமேற்று தொண்டுகள் புரிந்து வருவதையும், மேலும், இறைவன் மீது அன்பு கொள்வதை விட, அவரது அடியார்கள் மீது அன்பு கொள்ளுதல் சிறப்பானது என்றும் எடுத்துரைத்தார்

அதன் பின், திருநாவுக்கரசர் தானே என அப்பூதி அடிகளிடம் நாவுக்கரசர் கூற, தன் இல்லம் தேடி அவர் வந்ததற்காக மகிழ்ந்த அடிகள் உணவு உண்ண அவரை அழைத்தார்

வாழை  இலையை அறுக்கச் சென்ற அடிகளின் மகன் பாம்பு தீண்டி இறந்தான்.திருநாவுக்கரசர் வந்துள்ள போது மகன் இறந்ததால், அது தெரிந்தால், அவர் உணவு உண்ண மாட்டாரே! என்ற எண்னத்தில். மகன் மறைந்ததை மறைத்து அடிகளும், அவரது மனைவியும் சாப்பிட நாவுக்கரசரை அழைத்தனர்

ஆனால், திரு நாவுக்கரசர் தன்னுடன் அப்பூதி அடிகளின் மகனையும் உணவருந்த அழைத்து வரச் சொன்னார்

வேறு வழியின்றி, மகன் இறந்த விஷயத்தை அடிகள் கூற...இவையனைத்தும் இறைவனின் திருவிளையாடலே என பாடல் பாடி இறந்த மகனை உயிர்ப்பித்தார் நாவுக்கரசர்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் , முதல் நான்கு நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்ந்த திருநாவுக்கரசர் வாழ்ந்த  7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அப்பூதி அடிகள்

இவர் அவதரித்தத் தலமும், முக்தி அடைந்தத் தலமும் திங்களூர் ஆகும்

No comments:

Post a Comment