Tuesday, May 9, 2017

3- அமர்நீதி நாயனார்



அமர்நீது நாயனார் சோழ நாட்டில் பழையாறை என்னும் பகுதியிலே பிறந்தார்.7ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலத்தவர்

சிவபெருமானின் முன்பு தராசுத் தட்டில் தன் மனைவி, மகனுடன் ஏறி கோவணக்கள்வராக வந்த சிவ பெருமானின் முன்பு தன்னையே அர்ப்பணித்து சிவபதம் அடைந்தவர்

வணிகர் குலத்தில் பிறந்த இவர், வணிகத்தால் பெரும் பொருள் ஈட்டினாலும், சிவனடியார்க்கு பணி புரிவதையே தன் தொண்டாகக் கொண்டிருந்தார்

சிவனடியார்க்கு உணவு, உடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய தொண்டுகளை செய்து வந்தார்.

திருநல்லூரில் மடம் கட்டி உணவு அளித்து வந்தார்.

அவருக்கு அருள் புரிய எண்ணிய சிவபெருமான், ஒருநாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலம் கொண்டார்.கையில் இரு கோவணம் முடிந்தத் தண்டுடன், கோவண ஆடையுடன் திருநல்லூரில் இருந்த மடத்தை அடைந்தார்

அவரைக் கண்டு மகிழ்ந்த அமர்நீதியார் அவரை உணவு உண்ண அழைத்தார்.

பிரம்மச்சாரியாரும் அதற்கு இசைந்து காவிரியில் நீராடச் சென்றார்.செல்லும் போது மழைவரினும் வரும் எனக் கூறித் தமது தண்டில் கட்டியிருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து, அதை ஜாக்கிரதையுடன் வைத்திருக்குமாறு கூறிச் சென்றார்.அமர்நீதியார், அதனைத் தனியாக ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்தார்

சிவனடியார், கோவணத்தை மறையும்படி செய்து, மழையில் நனைந்தவராய் வந்தார்.வைத்திருந்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார்.ஆனால், வைத்த இடத்தில் இல்லாது எங்கு தேடியும் அதைக் காணாது அமர்நீதியார் திகைத்தார்.

வேறு புதிதாக ஒன்றை எடுத்து வந்து, கொடுத்து சிவனடியாரிடம் நடந்ததைக் கூறினார்

அதனைக் கேட்ட சிவனடியார் , கோபமுற்று, "நான் உமக்குக் கொடுத்த கோவணத்திற்கு ஒத்தது இத்த்ண்டில் உள்ளது.அதற்கு எடைக்கு எடை கோவணம் கொடுப்பீராகா" என்றார்

தராசுத் தட்டில் ஒன்றில் , அடிகளார் கொடுத்த கோவணத்தை வைத்து, தன்னால் நையப்பட்ட கோவணங்களை மறு தட்டில் அமர்நீதியார் வைத்தார்.ஆனால், எவ்வளவு வைத்தும் இவரது தட்டு தாழவில்லை.பின், அமநீதியார், தன்னிடம் இருந்த பொன், வெள்ளி ஆகியவற்ரை வைத்தார்.

தட்டு தாழவில்லை

பின் மனைவையையும் புதல்வனையும் தட்டில் வைத்தார்.பயனில்லை.

பின், ":நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் எனில், இத்தட்டு சமமாக நிற்பதாக" என்று ஐந்தெழுத்து ஓதித் தாமும் அதில் அமர்ந்தார்.

இப்போது தராசுத் தட்டுக்கள் ..இரண்டும் சமமாயின

அடியாராக வந்த இறையர், திருநல்லூரில் அம்மையப்பராகிய திருக்கோலத்தை நாயனாருக்குக் காட்டி..மனைவி, மைந்தர் ஆகியோருடன் சிவலோக வாழ்வை அளித்தனர்

வேதப் பொருளான சிவனும், சிவனடியார்களும் ஒரே நிறை என்பதை அமர்நீதி முளம் உலகத்திற்குக் காட்டினார் இறைவன்

அமர்நீதியார் குரு பூசை நாள் ஆனி பூரம்
அவரது முக்தித்தலம் திருனல்லூர் 

No comments:

Post a Comment